×

கிங்ஸ் கேட்டரிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

புதுக்கோட்டை, ஜுலை 12: புதுக்கோட்டையில் இயங்கி வரும் கிங்ஸ் கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர், மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைப்பெற்றது. தலைமை விருந்தினராக சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணிபிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசுகையில்,ஆயக்கலைகள் 64லிலும் சிறந்த கலை சமையல் கலை. மற்ற கலைகளை ரசிப்பதற்கு அந்த கலைகள் பற்றிய அறிவு தேவை. ஆனால் சமையல் கலையில் உணவை ருசிக்க தெரிந்தால் போதும். மேலும் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கும் இக்கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டில் வேலைப் பார்ப்பது பிரமிக்க கூடியதாகும். மாணவர்கள் அர்ப்பணிப்பாகவும், ஆர்வத்துடன் படித்தால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. உலகம் உள்ளவரை அழியாத தொழில் உணவு தொழில். எனவே இப்படிப்பை படிக்கும் உங்களுக்கு வேலை வாய்ப்பு என்றும் உள்ளது. ஆங்கில் மொழியை நன்கு கற்றுக் கொண்டால் எங்கும் வேலை பார்க்கலாம் என்றார்.நிகழ்ச்சிகளை மாணவி காயத்ரி தொகுத்து வழங்கினார். கல்லூரி இயக்குனர் விமலாசுந்தரவேல் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...