×

மதுக்கடையில் தகராறு காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

கறம்பக்குடி, ஜூலை 12: கறம்பக்குடி அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.கறம்பக்குடி அருகே நெய்வேலி வடதெரு கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன் (45), பற்குணம் (35), முருகநாதன் (31). மூவரும் உறவினர்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் அருகே உள்ள மதுக்கடைக்கு மூவரும் சென்றனர். அங்கு பாரில் ஏற்பட்ட தகராறின்போது குடிபோதையில் குமரேசன் மற்றும் பற்குணம் ஆகிய இருவரும் சேர்ந்து முருகநாதனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் குமரேசன் மற்றும் பற்குணம் ஆகியோரை கைது செய்தனர்.


Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...