×

ஆவுடையார்கோவிலில் சந்தன கூடு ஊர்வலம்

அறந்தாங்கி, ஜூலை 12: ஆவுடையார்கோவிலை அடுத்த காரணியானேந்தல் காட்டுமஸ்தான் ஒலியுல்லா சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. ஆவுடையார்கோவிலை அடுத்த காரணியானேந்தல் காட்டுமஸ்தான் ஒலியுல்லா 70ம் ஆண்டு தாபூத் எனும் சந்தனக்கூடு விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு விழா நடந்தது. வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூட்டில், சந்தனக் குடம் வைக்கப்பட்டு, வானவேடிக்கை, நாட்டியக் குதிரை நடனத்துடன், சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. சந்தனக் கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...