திருப்பூர், ஜூலை 11: அவிநாசி கோட்டம் அனுப்பர்பாளையம் உபகோட்டம் வெங்கமேடு மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சுப்பிரமணி (41) இந்நிலையில் நேற்று அதிகாரிகள் கூறியதன் பேரில் செட்டிபாளையம் கிராமம் வெங்கமேடு மகாவிஷ்ணு நகரிலுள்ள மின்சார டிரான்பார்மரில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.