திருப்பூர், ஜூலை 11:பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாமிலிருந்து 164 போலீசார் ஒரு மாத பயிற்சிக்காக திருப்பூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்த போலீசாருக்கு போலீஸ் ஸ்டேசன் நடைமுறை பணிகள், பாதுகாப்பு பணிகள், விஐபி எஸ்கார்ட், மற்றும் போலீசார் மேற்கொள்ளும் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு 82 போலீசார் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பயிற்சி பெற உள்ளனர்.