வாகன தணிக்கையில் போலீசாரை மிரட்டிய வாலிபர் கைதுதாரமங்கலம்,

ஜூலை 11: தாரமங்கலம் எஸ்ஐ பழனிசாமி, நேற்று தாரமங்கலம் அருகே தொளசம்பட்டி பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அமரகுந்தி தனசேகரன் (31), பரியம்பட்டி பகுதியை சேர்ந்த சதன் (21) ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களது வாகனங்களை நிறுத்தி அபராதம் கட்ட வேண்டும் என போலீசார் கூறினர். ஆனால், வாலிபர்கள் 2 பேர், அபராதம் கட்ட முடியாது என்றும், தங்கள் பகுதிய சேர்ந்த இளைஞர்களை திரட்டி சாலை மறியல் செய்வதாக போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.

அப்போது இரண்டு பேரை போலீசார் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். வழியில் சதன் போலீசாரிடம் இருந்து தப்பியோடினார். இதில் தனசேகரை கைது செய்து தப்பிய சதனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: