ஆத்தூர் நகராட்சி பள்ளியில் பாலியல் தொல்லை விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆத்தூர், ஜூலை 11: ஆத்தூர் நகராட்சி காந்திநகர் நடுநிலைப்பள்ளியில் நேற்று, ஆத்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் தொடுதல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. எஸ்ஐ சகுந்தலா, மாணவிகளிடம் பேசியதாவது: பாலியல் தொல்லை என்பது அறவே ஒழிக்கபட வேண்டியது அகும். யாரேனும் அத்துமீறனால், தாமதிக்காமல் அருகில் உள்ள காவல் நிலையங்களில் மாணவிகள் புகார் தெரிவிக்கலாம். என்றார். நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் திலகவதி உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: