ஜூலை 11:
ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பெத்தாம்பட்டி வித்யா மந்திர் பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமரேசன் தலைமை தாங்கி பேசினார். தமிழ் ஆசிரியர் பிரதீபா, வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி தலைவர் அண்ணாமலை, தேமொழிசண்முகசுந்தரம், கலாவதி மாசிலாமணி, டாக்டர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தொலைக்காட்சி புகழ் புலவர் ராமன், நிறம் மாறாத பூக்கள் என்ற தலைப்பில் பேசினார். . நிகழ்ச்சி தொகுப்புரை மோனிஷா வழங்கினார்.