சூறைக்காற்றில் மின்கம்பம் சாய்ந்து மாடு பலி

கெங்கவல்லி, ஜூலை 11: கெங்கவல்லி அருகே, சூறைக்காற்றில் மின் கம்பம் சாய்ந்து மாடு பலியானது. கெங்கவல்லி தாலுகா வீரகனூர் அருகே, புளியங்குறிச்சி காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (40) விவசாயி. இவரது தோட்டத்தில் மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நே்றறு மாலை திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், வெங்கடேஷ் வீட்டருகே இருந்த மின்கம்பம் சாய்ந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது. தகவலின் பேரில், மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: