திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை

ஏர்போர்ட், ஜூலை 11: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் 259 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை கைப்பையில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அதே போன்று மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த மலேசியாவை சேர்ந்த சரஸ்வதி வீரப்பன் என்பவர் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் அணிந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 500 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இருவரிடமும் விமான நிலைய அதிகாரிகளின் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: