திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜூலை.11: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (12ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. 10ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர் வரை 18 வயது நிரம்பிய 35 வயதுக்குட்பட்டோர் முகாமில் பங்கேற்கலாம். இந்நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: