மாநகராட்சி 4 கோட்டங்களில் குறைதீர் கூட்டம் 13ம் தேதி நடக்கிறது

திருச்சி, ஜூலை 11: திருச்சி மாநகராட்சி 4 கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிசேகபுரம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களுக்கு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இக்குறைதீர்க்கும் முகாமில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, கட்டிடம் மற்றும் திட்ட அனுமதி, அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல், புதிய காலிமனை வரி விதிப்பு, புதிய வீட்டு வரி விதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் வரி பெயர் மாற்றம் போன்ற மனுக்களை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டு உரிய காலத்திற்குள் உத்தரவு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: