பாளையில் நாளை ஸ்தோத்திர கூட்டம்

நெல்லை, ஜூலை 11:  ஜெபகோபுரம், நல்ல சமாரியன் சபை சார்பில் 17வது ஆண்டு ஸ்தோத்திர கூட்டம் பாளை செல்வி கல்யான மஹாலில் நாளை (வெள்ளி) மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இதில் நல்ல சமாரியன் ஐக்கியம் தலைவர்  அப்போஸ்தலர் ஜோசப் பாலச்சந்திரன் பங்கேற்று தேவசெய்தி அளிக்கிறார். மதுரை அல்லேலுயா டவர், பாஸ்டர் சேக் ராபர்ட் துதிஆராதனை நிகழ்த்துகிறார்.  பாஸ்டர் பாபு பால்தினகரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை ஜெபகோபுரம் நல்ல சமாரியன் சபை விசுவாச குடும்பத்தார்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: