ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

நெல்லை, ஜூலை 11:  அம்பை அருகே பிரம்மதேசம் வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சரவணன் (23). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை அம்பையிலிருந்து முத்து (24), மணிகண்டன் (29) ஆகியோரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வாகைகுளம் சென்று கொண்டிருந்தார்.

அம்பை-தென்காசி சாலை வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் அருகே திருப்பத்தில் திரும்பும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் பயணித்தவர்கள் மற்றும் டிரைவர் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியே சென்றவர்கள் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆட்டா டிரைவர் சரவணன் இறந்தார். இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: