நெல்லை, ஜூலை 11: அம்பை அருகே பிரம்மதேசம் வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சரவணன் (23). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை அம்பையிலிருந்து முத்து (24), மணிகண்டன் (29) ஆகியோரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வாகைகுளம் சென்று கொண்டிருந்தார்.
அம்பை-தென்காசி சாலை வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் அருகே திருப்பத்தில் திரும்பும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.