வக்கீலை தாக்கிய வாலிபர் கைது

திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் ஒருவரை வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் விஜயகுமார் (34). இவருக்கு கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தனது வழக்கிற்கான ஆலோசனை கேட்டுள்ளார். மேலும் தனக்கு நடக்க முடியாததால் ஊத்துக்குளி சாலையில் வந்து தன்னை சந்திக்கும்படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து வழக்கறிஞர் விஜயகுமார்  அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.  அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் விஜயகுமாரை தாக்கிவிட்டு தகாத வார்த்தைகளில் திட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில்,  திருப்பூர் ஆலங்காடு பகுதியில் தங்கி வேலை செய்து வந்த சபரி விஜய் (21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: