×

செங்கம் டவுன் பேரூராட்சியில் 5வது நாளாக துப்புரவு பணியாளர்கள் தர்ணா

செங்கம், ஜூலை 10: செங்கம் டவுன் பேரூராட்சியில் 5வது நாளாக தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். செங்கம் டவுன் பேரூராட்சியில் கடந்த 4ம் தேதி முதல் தினக்கூலி தொழிலாளர்கள் பணி வழங்க வேண்டி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் எம்எல்ஏ முபெ.கிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த மனுவை கலெக்டரிடமும் அளித்தனர். ஆனால் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் 5வது நாளான நேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, தங்களின் ராட்டத்தை அரசு துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது மனவேதனை அளிக்கிறது. தற்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையில் நிரந்தர பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளமுடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது. இதனால், செங்கம் நகரின் பல பகுதிகளில் குப்பைகள் மலைப்போல் குவிந்துள்ளது. கழிவுநீர் கால்வாய் சரி செய்யவில்லை என்று பணியாளர்கள் கூறினர். குறிப்பாக, மண்டல அலுவலர் மற்றும் செயல் அலுவலரின் அலட்சியபோக்கை கண்டித்து இந்த போராட்டம் நடப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags :
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...