ரங்கம் கோட்ட அதிகாரி மக்களிடம் சமரச பேச்சு குழுமணி கிராமத்தில் கூட்டு பண்ணைய திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவெறும்பூர், ஜூன் 27: குழுமணி கிராமத்தில் அந்தநல்லூர் வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கூட்டுப் பண்ணைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நேற்று நடந்தது.அந்தநல்லூர் வேளாண் அலுவலர் தினேஷ்ராஜா வரவேற்று, வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து விரிவாக பேசினார். சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவரும், பேராசிரியருமான சித்ரா பங்கேற்று, வாழை சாகுபடியில் மண் மற்றும் உர மேலாண்மை குறித்து தொழில் நுட்ப கருத்துக்களை எடுத்துரைத்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் சிலம்பரசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரன்ஸி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் நர்மதாபாபி நன்றி தெரிவித்தார்.

Related Stories: