ஞாயிறுதோறும் படியுங்கள் சாதிப்பெயரை சொல்லி

மண்ணச்சநல்லூர், ஜூன் 27: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரையில் கோயில் கோபுரம் கட்டுமானப் பணியில் இருந்தவரை சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது போலீசார் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில். இக்கோயில் ரங்கம் ரங்கநாதர் கோயிவின் சார்பு கோயிலாகும். இக்கோயிலில் வடக்குவாசலில் கோயில் கோபுரம் கட்டுமானப்பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இதனால் வடக்குவாசல் அடைக்கப்பட்டுள்ளது. திருவெள்ளரை நேதாஜி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் பன்னீர்செல்வம்(48). வடக்குவாசல் கோயில் கோபுரம் கட்டுமானப்பணியில் பன்னீர்செல்வம் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 15ம் தேதி பன்னீர்செல்வம் வடக்குவாசல் பகுதியில் எலக்ட்ரிக்கல் வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் காரில் வந்தார். கோயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதால் வடக்குவாசல் வழியாக யாரும் செல்லமுடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. ரங்கராஜன் நரசிம்மன் தடுப்புகளை அகற்றிவிட்டு வடக்குவாசல் வழியாக கோயிலுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் தடுத்தும் அதை பொருட்படுத்தாமல் ரங்கராஜன் நரசிம்மன் வடக்குவாசல் வழியாக கோயிலுக்குள் சென்றுவிட்டார்.

பின்னர் ரங்கராஜன் நரசிம்மன் மீண்டும் வடக்குவாசல் வழியாக வெளியே செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த பன்னீர்செல்வம் கோபுரம் கட்டுமானப்பணி நடப்பதால் பாதுகாப்பு கருதி இந்த வாசல் அடைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்த அறிவிப்பு பலகையை காட்டியுள்ளார். மேலும் இந்த வழியாக செல்லக்கூடாது என்று தடுத்துள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தில் ரங்கராஜன் நரசிம்மன் பன்னீர்செல்வத்தை சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பன்னீர்செல்வம் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரங்கராஜன் நரசிம்மன் மீது எஸ்சி எஸ்டி சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: