ஆணையரிடம் வழங்கினர் லால்குடி அருகே பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

லால்குடி, ஜூன் 27: லால்குடி அருகே அகலங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விசீர் வழங்கும் விழா நடைபெற்றது.கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.35 ஆயிரம்; மதிப்புள்ள பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் மார்டீன், சகாதேவன், புரூனோ 20க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் வழங்கினர். அகலங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கல்விச்சீரை முக்கிய தெருக்களின் வழியாக பள்ளிக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து நடந்த விழாவிற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை ரோஸ்மேரி வரவேற்றார். உதவி தலைமையாசியர் பிரிட்டோ, மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

Related Stories: