திருச்சி, ஜூன்.27: திருச்சி மாவட்ட தொழில் மையம் மூலம், வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க தமிழக அரசின் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக வசித்து வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சிறு தொழில்களை தொடங்கிட மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரையிலான வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18-35 வயதுடையவர்கள் பயன்பெறலாம். பெண்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும். மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.