தேசிய வில்வித்தை போட்டியில் தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை

சேலம், ஜூன் 27:  தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில், தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேட்டூர் வள்ளுவன் வாசுகி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்சய், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு, அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். சாதனை படைத்த மாணவரை, தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணன், செயலர் கலாபரமசிவம், பொருளாளர் காளியண்ணன், துணை தலைவர்கள் பிரபாகரன், ரவி, இணைச்செயலர் முத்துசாமி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: