இடைப்பாடி புதன் சந்தையில் ₹29 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

இடைப்பாடி, ஜூன் 27:  இடைப்பாடி புதன் சந்தையில் ₹29 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.இடைப்பாடியில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். நேற்று கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 89டன் காய்கறிகள், 17டன் பலாப்பழம், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பீன்ஸ் 1கிலோ ₹50 க்கும், கேரட் கிலோ ₹50 முதல் ₹60 க்கும், பீட்ரூட் கிலோ ₹30 முதல் ₹35 க்கும், முள்ளங்கி ₹20 க்கும், முட்டைகோஸ் கிலோ ₹25 முதல் ₹30 க்கும், வெண்டை கிலோ ₹20 க்கும், உருளை கிழங்கு ₹20 முதல் 23க்கும், பெரிய வெங்காயம் ₹18 முதல் ₹20 க்கும், சின்ன வெங்காயம் ₹30 முதல் ₹35 க்கும், சேவல் ஒன்று ₹200 முதல் ₹900 வரையும், கோழி ₹100 முதல் ₹600 வரையும், பலாப்பழம் ₹50 முதல் ₹300 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ₹29 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: