×

கெங்கவல்லி அருகே கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வாலிபர் காயம்

கெங்கவல்லி, ஜூன் 27:  கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மருமகள் அலமேலு, நேற்றிரவு 7 மணி அளவில் சமைப்பதற்காக வீட்டில் உள்ள கேஸ் அடுப்பை பற்ற வைக்க சென்றார். அப்போது, திடீரென ரெகுலேட்டர் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட ஆறுமுகம், கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) செல்லபாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்து சிலிண்டரை வெளியே எடுத்து வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அலமேலுவின் கணவர் முருகேசன், லேசான தீக்காயமடைந்தார். அவர் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.





Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது