கெங்கவல்லி, ஜூன் 27: கெங்கவல்லியில் மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கெங்கவல்லி தாலுகாவில், மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் கமலா தலைமை வகித்தார். கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார். இக்கருத்தரங்கத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, பயிர் பாதுகாப்பு பயிற்று மைய இயக்குனர் பிரபாகர் கலந்து கொண்டு, மக்காச்சோளத்தில் பயிரைத் தாக்கம் படைப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து பேசினார். பூச்சியியல் துறை பேராசிரியர் சாத்தையா, முத்துகிருஷ்ணன் ஆகியோர், தொழில்நுட்ப விளக்க உரையை வழங்கினர்.