×

சமூக பொருளாதார கணக்கெடுப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

நாமக்கல்,  ஜூன் 27: சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு ஆய்வு  செய்ய வரும் போது, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, நாமக்கல்  மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக  பொருளாதார கணக்கெடுப்பு பணியில் முதன்மை தரவுகளை சேகரிப்பதில் தேசிய  மாதிரி ஆய்வு நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. சமூக, பொருளாதார காரணிகளை  கணிப்பதற்கான நுகர்வோர் செலவினம், கல்வி, வேலைவாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை,  வேளாண்மை மற்றும் சுகாதாரம் போன்ற தலைப்புகளில், அகில இந்திய அளவில்  இந்த நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்  தொடர்ச்சியாக குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலைமை, செயல்பாடுகள், வேலை  வாய்ப்பு நிலைமை போன்ற தரவுகள் சேகரிக்க உள்ளனர். எனவே, நாமக்கல்  மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் பணியாளர்களுக்கு, பொதுமக்கள்  ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்