×

திருச்செங்கோட்டில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

திருச்செங்கோடு, ஜூன் 27: திருச்செங்கோடு நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு, காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி 7வது வார்டு தொண்டிகரடு பகுதியில் உள்ள 5வது தெருவில், பல இடங்களில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி, சாலைகளில் வழிந்தோடி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரிவர  குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தொண்டிகரடு பகுதியில் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு