×

பெண்ணிடம் தகராறு

தேனி, ஜூன் 27: முன்விரோதம் காரணமாக பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.வீரபாண்டி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (27). இவர் தோட்டத்திற்கு விவசாயம் தொடர்பான வேலைக்கு சென்றிருந்தார். முன்விரோதம் காரணமாக இவரது உறவினர்கள் பெரியஈஸ்வரன், பூச்சி, ஈஸ்வரி, ஜோதி ஆகியோர் முத்துலட்சுமியிடம் தகராறு செய்தனர்.இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியஈஸ்வரனை (27) கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு