×

பெரியகுளம் அருகே தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம்

பெரியகுளம், ஜூன் 27: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடந்தது. இதில் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் காமராஜ்பாண்டியன் மாநில பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கமிட்டி அறிக்கையை காலதாமதமின்றி அமல்படுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலாளர்களின் பணியிட மாற்றம் தொடர்பான அரசாணையை மறு பரிசீலனை செய்து பொதுப்பணி நிலைத்திறன் ரத்து செய்து பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கியதில் உள்ள முரண்பாடுகளை விரைவில் கலைந்திட வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...