×

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம், ஜூன் 27:  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 2019 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை பகல் 11.30 மணியளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை