×

குளவி கொட்டி மாணவர் சாவு

ராமநாதபுரம், ஜூன் 27:  பரமக்குடி அருகே சாத்தனூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தர்ஷன்(8). 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் குளவி கொட்டி விட்டதாகக் கூறியுள்ளார்.  மயங்கிய சிறுவனை கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் காட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அடுத்து ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், சிறுவனுக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. டாக்டர் பால்ராஜ் சிறுவனை பரிசோதனை செய்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், உடன் சிகிச்சை அளித்திருந்தால் மகனை காப்பாற்றியிருக்கலாம் என பாலமுருகன் டாக்டரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், அவரை சமாதானம் செய்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை