×

கொங்கு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

ஈரோடு, ஜூன் 27:  ஈரோடு அருகே நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளை தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தா கலந்து கொண்டு முதலாம் ஆண்டு வகுப்பை துவக்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக ராஜ்மோன் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளை செயலாளர் சத்தியமூர்த்தி, அறக்கட்டளை பாதுகாவலர் இளங்கோ, முதல்வர் ராமன் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் குமரகுரு மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...