×

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜூன் 27:சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தின நாளை முன்னிட்டு கோவையில் நேற்று நடந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். “புகை நமக்கு பகை”, “போதைப் பொருட்களை தவிர்ப்போம்”, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் சிறிது தூரம் பேரணியில் மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.
தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்தப்பேரணியானது வ.உ.சி. மைதானத்தில் நிறைவு பெற்றது. அங்கு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...