×

முன்னாள் ராணுவவீரர்களின் குழந்தைகள் நிதியுதவி பெறலாம்

திண்டுக்கல், ஜூன் 27: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் வினய் தெரிவித்ததாவது:2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான முன்னாள் படைவீரர்கள்களின் மாணவ, மாணவிகள் கல்விக்கு தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை http://www.esmwel.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை அணுகி விபரம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...