×

தோப்பில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

நத்தம், ஜூன் 27: நத்தம் அருகே தோப்பில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.நத்தம் அருகே செங்குளத்தில் ஒரு தனியார் மாந்தோப்பில் உள்ள களத்து வீட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை திடீரென சப்தம் எழுப்பின. இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்தது தெரிந்தது. இதுகுறித்து உடனேநத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பாம்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பாம்பை கரந்தமலையின் உயர் பகுதியில் கொண்டு போய் விட்டனர்.


Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு