×

வத்தலக்குண்டு அருகே கடைக்குள் லாரி புகுந்து ஒருவர் பலி

வத்தலக்குண்டு, ஜூன் 27: வத்தலக்குண்டு அருகே விருவீட்டில் கடந்த 24ம் தேதி தனியார் பஸ் பின்புறமாக மோதியதில் லாரி ஒன்று டீக்கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. இதில் டீ குடிக்க வந்திருந்த செக்காபட்டி ஜோசியர் தங்கவேலு உள்பட 3 பேர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தங்கவேலு நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்திற்கு பஸ்சின் வேகம், ஆக்கிரமிப்பு செய்த கடைகளே காரணம். எனவே வத்தலக்குண்டு ரோட்டில் அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விருவீடு ஊராட்சி நிர்வாகம் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்