×

பட்டிவீரன்பட்டியில் பைரவருக்கு சிறப்பு பூஜை

பட்டிவீரன்பட்டி, ஜூன் 27: பட்டிவீரன்பட்டியில் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள ஆகார்ஷண பைரவருக்கு நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பைரவரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி குடைமிளகாய், எலுமிச்சை, தேங்காள் விளக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர். இதேபோல் சாவடிபஜாரில் காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்