×

இறந்த ஆட்டு இறைச்சி பறிமுதல்

உசிலம்பட்டி, ஜூன் 27: எழுமலை பகுதிகளில் இறந்த ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பதாக புகார் வந்தது. இதன்பேரில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் முருகன், எழுமலை பேரூராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் செல்லப்பாண்டி ஆகியோர் அதிகாலையில் எழுமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 11 ஆட்டு இறைச்சி கடைகளில் சோதனை செய்தனர். அதில் எழுமலை புல்லுகடை மைதானத்தில் உள்ள பூரி(எ)வெள்ளைச்சாமி கடையில் இறந்துபோன ஆட்டை வெட்டி இறைச்சி விற்பனைக்காக பயன்படுத்த வைத்திருந்த 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, குழிதோண்டி புதைத்தனர். இதேபோல் நேற்று மாலை எழுமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  6 சிக்கன் கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் மிகவும் பழைய எண்ெணய்யைப் பயன்படுத்தியது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர்.


Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...