×

இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

மதுரை, ஜூன் 27: மதுரை நகரில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சிசிபி-1 இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பரத் ஸ்ரீனிவாஸ், ஐகோர்ட் கிரைம் பிரிவுக்கும், திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நாகராஜன், சிசிபி - 1 யூனிட்டுக்கும் இடமாற்றம் ெசய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தேனி மாவட்டம் தென்கரை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மதனகலா (ஏற்கனவே மதுரை நகர் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றியவர்) திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கும், மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய புவனேஸ்வரி திருப்பரங்குன்றம் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி டவுன் காவல்நிலையத்தில் பணியாற்றிய சங்கீதா, மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரியா, மதுரை செல்லூர் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நவீனமுறையில் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்இந்த பாலம் கட்டுவதற்கு நாராயணபுரம்  சாலை ஓரம் அமைந்திருந்த கோயில் நவீன தொழில் நுட்ப முறையில் நகர்த்தி  வைக்கப்பட்டுள்ளது. தூண்கள் அமைக்கும் பணிகளே பிரதானமாகும், எனவே இடைஇடையே  போக்குவரத்து வசதிக்கான இடங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தூண்கள்  கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...