×

சோழவந்தான் அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை

சோழவந்தான், ஜூன் 27:  சோழவந்தான் அருகே நேற்று அதிகாலை   அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிழக்குதெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சுரேஷ்(29).   லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை வேலை முடிந்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது மயானம் அருகில் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டி சாய்த்தது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு    வந்த  சமயநல்லூர் டி.எஸ்.பி.மோகன்குமார், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை முன் விரோதத்தால் நடந்ததா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருமங்கலம் அருகே ஓராண்டிற்கும்...