செஞ்சி, ஜூன் 27: மேல் மலையனூர் அடுத்த வடவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் ரஜினி (30) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை டவெட்டியில்இருந்து மோட்டார் சைக்கிளில் சேத்பட் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரஜினியை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேAர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரஜினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.