இளம்பெண் மாயம்

புதுச்சேரி, ஜூன் 27:  புதுவை, வாணரப்பேட்டை, அலைன் வீதியில் வசிப்பவர் ஆரோக்கியசாமி (25). இவருக்கு குணசுந்தரி (24) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தட்டு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்த ஆரோக்கிய சாமிக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தம்பதியிடையே தகராறு முற்றிய நிலையில் வீட்டில் இருந்து குணசுந்தரி தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்துள்ளார். ஆரோக்கியசாமியும் அலட்சியமாக இருந்த நிலையில், ஒருவாரமாக எந்த தகவலும் வராததால் அவரது மாமியாரிடம் மனைவி பற்றி விசாரித்துள்ளார். அப்போது அங்கு குணசுந்தரி வரவில்லை என தெரியவரவே அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து ஏமாற்றமடைந்த அவர் நேற்று முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிந்த போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: