பல்கலைக்கழக மாணவி மாயம்

பாகூர், ஜூன் 27: கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கலைமணி மகள் கலையரசி (22). புதுவை ல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி (இயற்பியல்) 2ம் ஆண்டு படித்து வருகிறார். கிருமாம்பாக்கத்தில் இருந்து பேருந்தில் தவளக்குப்பம் சென்று அங்கிருந்து பல்கலைக்கழக ேபருந்தில் செல்வது வழக்கம். கடந்த 24ம் தேதி வழக்கம்போல் பல்கலைக்கழகத்துக்கு சென்றவர், மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைமணி அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: