கரூர், ஜூன் 27: கரூர் நகராட்சி பள்ளியில் கழிப்பறை வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் திருமாநிலையூர் அருகேயுள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் மாணவிகள் பயன்பாடிற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கழிப்பறை வளாகம் கட்டி பயன்பாட்டில் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்பட போதிய பராமரி ப்பு இல்லாத காரணத்தினால் இதனை பயன்படுத்திட முடியாத நிலை நிலவி வருகிறது. இதனை சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, பயன்படுத்துவர்களின் நலன் கருதி, இந்த கழிப்பறை வளாகத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.