×

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் கரூரில் வேலைவாய்ப்பு முகாம்

கரூர், ஜூன் 27: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இந்த வாரத்திற்குரிய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமானது ஜூன் 28ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கணினிப்பயிற்சி மற்றும் பட்டம் முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயக்குறிப்புளுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வருகை புரிந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியாகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.தனியார் துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலை வாய்ப்பற்ற மற்றும் இந்தாண்டு கல்லூரி படிப்பினை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் ஜூன் 28ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா