×

நீடாமங்கலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு 1150 டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,ஜூன்27: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன் களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும் ,அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்களை தனியார் அரவை முகவர் மூலம் அரவை செய்த அரிசிகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி ,வட்ட கிடங்குகள் மன்னார்குடி, கீழபாண்டியில் சேமித்து வைக்கப்பட்டடிருந்த சன்ன ரக அரிசி மூட்டைகளை நேற்று 92 லாரிகளில் 1150 டன் சன்ன ரக அரிசி மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து 23 வேகன்களில் (ரயில் பெட்டிகளில்) திண்டுக்கல் மண்டலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...