×

பணி நியமன ஆணை வழங்கல் 148 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கல் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 16 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர், ஜூன் 27: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ 50 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 309 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்.அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பேர்களுக்கு தலா ரூ 3 ஆயிரத்து 573 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், ஒருவருக்கு ரூ ஆயிரத்து 500 மதிப்பிலான கல்வி உதவி தொகை காசோலையும் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பேருக்கு விதவை உதவி தொகைக்கான ஆணையும் என மொத்தம் 16 பேருக்கு ரூ 49 ஆயிரத்து 949 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் வழங்கினார்

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்