சாக்கோட்டை செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளியில் யோகா தினவிழா

கும்பகோணம், ஜூன் 27: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டையில் உள்ள செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் உலக யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியைகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். யோகா தினம், யோகா ஆசனங்கள் குறித்து பேராசிரியை மகேஸ்வரி பேசினார். உடற்பயிற்சி ஆசிரியை கிரிஜா பயிற்சியளித்து சிறப்புரையாற்றினார். யோகா தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் தாளாளர் மரியசெல்வம் ஏற்பாடுகளைம் சிறப்பாக செய்திருந்தார்.

Related Stories: