கும்பகோணம் ரயில் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கும்பகோணம், ஜூன் 27: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.ரயில்வே இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை வகித்தார். எஸ்எஸ்ஐ குமார், போலீசார் ஜெகதீசன், ராஜசேகர், அய்யப்பன் முன்னிலை வகித்தனர். போஸ்கோ சட்டம், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி, சிறுவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து வழக்கறிஞர் இளங்கோவன் பேசினார்.மேலும் ஆடுதுறை அன்பாலயா நாடக குழுவினர், போஸ்கோ சட்டம் குறித்து கலைநிகழ்ச்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: