ஆர்டிஓவிடம் சரண் மினி பேருந்து மோதி பெண் பலி

கும்பகோணம், ஜூன் 27: கும்பகோணம் அருகே பைக் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர் படுகாயமடைந்தார்.

தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி சுபாஷ் சந்திரபோஸ் (45). இவருக்கு இந்திராராணி (40) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கும்பகோணத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பைக்கில் இந்திராணியை அழைத்து கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் சென்றார். பின்னர் நேற்று மாலை திருப்பந்துருத்திக்கு சென்றார். கீழமாங்குடி கிராமம் வழியாக சென்றபோது பின்னால் சுவாமிமலை நோக்கி வந்த மினி பேருந்து, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுபாஷ் சந்திரபோஸ், இந்திரராணி ஆகியோரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இந்திராராணி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுபாஷ் சந்திரபோஸ், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: