அரியலூர், ஜூன் 27: அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.